நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை மிகவும் வளமாக வைத்திருப்பதிலும் உணவுப் பாதுகாப்பை நன்கு உறுதி செய்வதிலும் தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கை இனங்கள் வகிக்கும் அத்தியாவசியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்லோவேனியா நாட்டினைச் சேர்ந்த தேனீ வளர்ப்பவரான அன்டன் ஜான்சாவின் பிறந்த நாளினைக் கௌரவிக்கும் வகையில் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
அவர் நவீன தேனீ வளர்ப்புத் துறையில் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
ஸ்லோவேனியாவானது இந்த முன்னெடுப்பினை மேற்கொண்டதையடுத்து, 2017 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த ஆண்டின் கருத்துரு "Bee inspired by nature to nourish us all" என்பதாகும்.