2019 ஆம் ஆண்டின் உலக பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் மொத்தம் உள்ள 180 நாடுகளில் இந்தியா 140-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders) என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.
இந்தக் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது.
பாரீஸை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பானது உலகெங்கிலும் உள்ள பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்களைத் தடுக்கும் மற்றும் ஆவணப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஒரு இலாப நோக்கில்லா நிறுவனமாகும்.