உலக மனப்பித்து நோய் விழிப்புணர்வு தினம் 2025 - மே 24
May 31 , 2025 424 days 265 0
இந்தத் தினமானது மனப்பித்து நோய் அறிகுறிகளை அறிந்து கொள்வதையும், அவை மனித வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனப்பித்து நோய்/ஸ்கிசோஃப்ரினியா என்பது மிகவும் தவறான வகையில் புரிந்து கொள்ளப் பட்ட மனநலப் பாதிப்புகளில் ஒன்றாகும்.
இதன் பொருள் தனி நபர்கள் நிஜ உலகில் இல்லாதவற்றைப் பார்க்கவும், கேட்கவும், அல்லது நம்பவும் கூடிய நிலையாகும்.
உலகளவில் சுமார் 24 மில்லியன் மக்கள் அல்லது பொது மக்களில் 0.3% முதல் 0.7% வரை இந்த நிலையினால் பாதிக்கப்படுகின்றனர்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "Rethink the Label: Reclaim the Story" என்பதாகும்.