இது மூளைக் கட்டிகளின் தீவிரத் தன்மை, முன்கூட்டியேக் கண்டறிதல் மற்றும் தடுப்பு குறித்து பொது மக்களுக்குக் கல்வியளிப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூளைக்கட்டி என்பது மனித மூளையின் முறையான செயல்பாட்டை வெகுவாகச் சீர் குலைக்கின்ற மூளையில் உள்ள திசுக்களின் அல்லது அதன் படலத்தின் (மெனிங்ஸ்) அசாதாரண வளர்ச்சியாகும்.
இந்தத் தினமானது, முதன்முதலில் ஜெர்மனி மூளைக் கட்டி நோய்ச் சங்கத்தினால் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.