TNPSC Thervupettagam

உலக வங்கியின் புதுப்பிக்கப்பட்ட வறுமைக் கோட்டு நிலை

June 15 , 2025 15 hrs 0 min 20 0
  • உலக வங்கியானது, அதன் வறுமைக் கோட்டின் உச்ச வரம்பினை ஒரு நாளைக்கு 3 டாலராக உயர்த்தியுள்ளது.
  • இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்த வரம்பு ஒரு நாளைக்கு சுமார் 3.65 டாலரிலிருந்து 4.20 டாலராகவும், உயர் மட்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 6.85 டாலரிலிருந்து 8.40 டாலராகவும் அதிகரித்துள்ளது.
  • குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாட்டில் (LMIC) வறுமை விகிதம் 33.7 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது.
  • 2011-12 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான தசாப்தத்தில், இந்தியா 171 மில்லியன் மக்களை தீவிர வறுமை நிலையிலிருந்து மீட்டுள்ளது.
  • இந்தியாவின் தீவிர வறுமை விகிதம் ஆனது, 2011-12 ஆம் ஆண்டில் 27.1 சதவீதத்தில் இருந்து ஒரு தசாப்தத்தில் 5.3% ஆகக் குறைந்துள்ளது.
  • இந்தியாவில், 2024 ஆம் ஆண்டில் சுமார் 54,695,832 பேர் ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்தனர்.
  • இதனால், ஒரு நாளைக்கு 3 டாலர் (2021 ஆம் ஆண்டு PPP - சதவீத மக்கள் தொகை) என்ற வறுமை விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 5.44% ஆகும்.
  • 2011-12 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் தீவிர வறுமை விகிதம் 16.2 சதவீதத்திலிருந்து 2.3% ஆகக் குறைந்துள்ளது.
  • கிராமப்புறத் தீவிர வறுமை 18.4 சதவீதத்திலிருந்து 2.8% ஆகவும், நகர்ப்புறத்தில் 10.7 சதவீதத்திலிருந்து 1.1% ஆகவும் குறைந்துள்ளது.
  • 2011-12 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் 269 மில்லியன் இந்தியர்கள் தீவிர வறுமைக் கோட்டிலிருந்து விடுபட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்