உலகளாவிய G20 சுகாதார உச்சி மாநாடானது ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இத்தாலி நாட்டினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கான செயல்பாட்டு நிரல்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன.
மேலும் ரோம் கொள்கைப் பிரகடனத்தை உருவாக்கி அதற்கு ஒப்புதல் வழங்கவும் இதில் முடிவு செய்யப் பட்டுள்ளது.