கோட் டி ஐவோரியின் அபிட்ஜானில் நடைபெற்ற 27வது UPU (காங்கிரஸ்)மாநாட்டில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் இரு முக்கிய அமைப்புகளின் உறுப்பினர் பொறுப்பிற்காக நடத்தப்பட்ட தேர்தலில் இந்தியா வென்றுள்ளது.
அதில் நிர்வாகச் சபைக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாகச் சபைக்கான தேர்தலில் தெற்காசியா மற்றும் ஒசியானியா பகுதிகளில் (Oceania region) இந்தியா அதிக வாக்குகளைப் பெற்றது.
இது தவிர அஞ்சல் செயல்பாட்டுச் சபைக்கும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது, உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தில் ஒத்துழைப்பினை வலுப்படுத்த அனைத்து நாடுகளுடன் இணைந்து செயல்படும்.