TNPSC Thervupettagam

உலகளாவிய அமைதிக் குறியீடு 2021

June 20 , 2021 1500 days 949 0
  • சிட்னியின் பொருளாதார மற்றும் அமைதி நிறுவனமானது (Institute for Economics and Peace – IEP) 15வது உலகளாவிய அமைதிக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • உலகளாவிய அமைதிக் குறியீடானது உலகளாவிய அமைதியை மதிப்பிடும் உலகின் ஒரு முன்னணி மதிப்பீடாகும்.
  • 2008 ஆம் ஆண்டிலிருந்து முதலிடத்தில் இருந்து வரும் ஐஸ்லாந்து நாடானது மிகவும் அமைதியான நாடாக திகழ்ந்து வருகிறது.
  • இதனுடன் நியூசிலாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளும் முதலிடத்தில் உள்ளன.
  • இதில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் அமைதியற்ற நாடாக திகழ்கிறது.
  • இதனைத் தொடர்ந்து ஏமன், சிரியா, தெற்கு சூடான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள்  உள்ளன.
  • இந்தியா 135வது இடத்தில் உள்ளது.
  • இந்தியா தெற்காசியப் பிராந்தியத்தில் 5வது இடத்தில் உள்ளது.
  • தெற்காசிய பிராந்தியத்தில் பூடான் மற்றும் நேபாளம் ஆகியவை முறையே முதலாவது மற்றும் இரண்டாவது அமைதியான நாடுகளாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்