சர்வதேச எரிசக்தி முகமையானது (International Energy Agency – IEA) சமீபத்தில் உலகளாவிய ஆற்றல் ஆய்வு அறிக்கையினை வெளியிட்டது.
இந்தியாவில்
2019 ஆம் ஆண்டில் பதிவானதை விட இந்த ஆண்டில் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு 1.4% அதிகமாக உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
புதுப்பிக்கக் கூடிய ஆற்றலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அதிகரிப்பினை விட நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் மூன்று மடங்கு அதிகரிக்கப் பட இருக்கின்றது.
நிலக்கரியின் தேவையானது 9% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் கார்பன் வெளியீட்டின் தீவிரத்தை 33% என்ற அளவிலிருந்து 35% வரை குறைப்பதற்கு இந்தியா உறுதி மேற்கொண்டுள்ளது.
தற்போது, இந்தியாவின் கார்பன் டை ஆக்சைடின் வெளியீடு உலகளாவியச் சராசரியை விட 60% என்ற அளவிற்குக் குறைவாகவே உள்ளது.