TNPSC Thervupettagam

உலகளாவிய இரசாயனங்கள் கண்காணிப்புத் திட்டம் - UNEP-GEF

July 2 , 2026 9 hrs 0 min 10 0
  • உலகளவில் அபாயகரமான இரசாயனங்களின் கண்காணிப்பை வலுப்படுத்தச் செய்வதற்காக, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) ஆகியவற்றால் உலகளாவிய இரசாயனங்கள் கண்காணிப்புத் திட்டம் (GCMP) தொடங்கப்பட்டுள்ளது.
  • இது நீடித்த கரிம மாசுபடுத்திகளுக்கான (POPs) ஸ்டாக்ஹோம் உடன்படிக்கை மற்றும் பாதரசம் மீதான மினமாட்டா உடன்படிக்கை ஆகியவற்றின் மதிப்பீட்டிற்கு ஆதரவு அளிக்கிறது.
  • வளரும் நாடுகளில் இரசாயன மாசுத் தரவு மற்றும் கொள்கை முடிவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட GCMP என்பது, சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் கூட்டு நிதியுதவியுடன் கூடிய 23.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு முயற்சியாகும்.
  • அறிவியல் பூர்வமான ஆதாரங்களை உருவாக்குவதற்கும், கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் இரசாயனப் பாதுகாப்பு குறித்த சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இது ஆறு திட்டங்களைச் செயல் படுத்தும்.
  • POPs என்பவை சுற்றுச்சூழலில் நீண்ட காலம் நிலைத்திருந்து, உணவுச் சங்கிலிகளில் உயிர்த்திரட்சி அடையும் நச்சு இரசாயனங்கள் ஆகும்; அதே நேரத்தில் பாதரசம் என்பது நரம்பு, செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகளைப் பாதிக்கும் ஒரு நச்சுத் தனிமமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்