உலகளாவிய ஊக்க மருந்துப் பயன்பாட்டு மீறல்கள் குறித்த அறிக்கை 2025
December 21 , 2025 262 days 333 0
இந்த அறிக்கையை உலக ஊக்க மருந்து எதிர்ப்பு முகமை (WADA) வெளியிட்டது.
இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான ஊக்க மருந்துப் பயன்பாட்டு மீறல்கள் பதிவாகியுள்ளன.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (WADA) ஆனது, 2024 ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட 260 ஊக்க மருந்துப் பயன்பாட்டு வழக்குகளைப் பதிவு செய்தது.
இந்தியாவின் நேர்மறை விகிதம் 3.6 சதவீதமாக இருந்தது என்ற நிலையில்இது பெரிய அளவிலான சோதனைகளைக் கொண்ட நாடுகளில் மிக அதிகமாகும்.
இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) இந்த ஆண்டில் 7,113 ஊக்க மருந்து சோதனைகளை நடத்தியது.
பிரான்சு, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் ஒரு குறைவான மீறல்கள் பதிவாகின.