உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடு (GPI) 2026 இல் இந்தியாவின் தரவரிசை 125 வது இடத்திற்குச் சரிந்துள்ளதுடன் இது முந்தைய ஆண்டை விட ஒரு இடம் சரிந்துள்ளது.
இந்தக் குறியீட்டை குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் (GCS) வெளியிடுகிறது மற்றும் இயக்கம், முதலீடு மற்றும் வாழ்க்கைத் தர நன்மைகள் அடிப்படையில் கடவுச் சீட்டுகளை தரவரிசைப்படுத்துகிறது.
மேம்பட்ட இயக்கம் (50%), முதலீடு (25%) மற்றும் வாழ்க்கைத் தரம் (25%) ஆகிய வகைகளின் கீழ் 14 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி கடவுச்சீட்டுகளை இது மதிப்பீடு செய்கிறது.
உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம் (WEF) மற்றும் நிலையான வளர்ச்சி அறிக்கை போன்ற நிறுவனங்களின் தரவுகளை இந்தக் குறியீடு பயன்படுத்துகிறது.
2026 ஆம் ஆண்டுக் குறியீட்டில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகியவை மிகவும் வலுவான கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளன.