ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பல்கலைக்கழக நிறுவனம் (UNU-INWEH) உலகமானது உலகளாவிய நீர் திவால்நிலை சகாப்தத்தில் நுழைந்து உள்ளதாகக் கூறுகிறது.
நீர் திவால்நிலை என்பது மனிதர்கள் பாதுகாப்பாக மீள் நிரப்பக்கூடியதை விட அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துவதாகும் என்பதோடுஇது ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள், ஈரநிலங்கள், மண் மற்றும் பனிப்பாறைகளுக்கு நீண்டகாலச் சேதத்தை ஏற்படுத்துகிறது.
இது நீர் வளம் மீதான அழுத்தம் (அதிக தேவை, பெரும்பாலும் மீளக்கூடியது) மற்றும் நீர் நெருக்கடி (தற்காலிக அதிர்ச்சி, அவசர நடவடிக்கைகளால் சரி செய்யக் கூடியது) ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.
இதற்கான காரணங்களில் நீர் வளம் மெதுவாகக் குறைதல், பெரிய அணைகள் போன்ற உள்கட்டமைப்பினால் உந்தப்பட்ட அதிகப்படியான நீர்மட்டம், ஈரநிலங்கள் மற்றும் காடுகளின் சுற்றுச்சூழல் தரமிழப்பு மற்றும் பருவநிலையினால் பெருக்கப் பட்ட அதிகப்படியான நீர்மட்டம் ஆகியவை அடங்கும்.
பல நீர் அமைப்புகள் மீளமுடியாத அளவிற்கு சேதமடையக் கூடும் என்றும், சுற்றுச்சூழல் அமைப்புகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிக்கலாம் என்றும் அறிக்கை எச்சரிக்கிறது.