உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு (GTI) 2026-இன் 13-வது பதிப்பு, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதம் சரிவைக் கண்டதாக அறிக்கை அளித்துள்ளது, பயங்கர வாதம் தொடர்பான இறப்புகள் 28% குறைந்துள்ளன மற்றும் சம்பவங்கள் 22% குறைந்து உள்ளன.
ஆஸ்திரேலியாவின் சிட்னியைத் தலைமையிடமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தாக்குதல்கள் குறைந்த போதிலும், பயங்கரவாதம் அதிக கவனம் செலுத்தப் படுவதாகவும், பரவலாக்கப்பட்டதாகவும் மற்றும் டிஜிட்டல் முறையைச் சார்ந்ததாகவும் மாறி வருகிறது.
பயங்கரவாதம் தொடர்பான உயிரிழப்புகளில் சுமார் 70% பாகிஸ்தான், புர்கினா பாசோ, நைஜீரியா, நைஜர் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (DRC) ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
பயங்கரவாதக் குழுக்கள் இணையவழித் தீவிரவாதம், தனிநபர் தாக்குதல்கள், சிறிய தன்னாட்சிக் குழுக்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.