உலகளாவிய பிரச்சினையில் குழந்தைகளின் நலம் : பணி மற்றும் குடும்ப வாழ்வு மீதான கோவிட் – 19ன் தாக்கம்
July 29 , 2020 2162 days 775 0
இந்த அறிக்கையானது யுனிசெப்பின் ஆராய்ச்சி அலுவலகமான “இன்னோசென்டி” என்ற மையத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.
இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசியா நாடுகளைச் சேர்ந்த 22 மில்லியன் குழந்தைகள் கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக தங்களது ஆரம்பக் காலக் கல்வியான முந்தைய ஆரம்ப கால மழலைக் கல்வியை இழந்துள்ளனர்.
யுனிசெப் ஆனது தெற்கு ஆசியப் பகுதியில் ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.