2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பீகாரின் நாளந்தாவில் முதல் உலகளாவிய புத்த மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.
இந்தக் கல்வி மாநாடானது இந்தியாவின் கலாச்சார உறவுகளுக்கான மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த உலகலாவிய மாநாட்டை முன்னிட்டு இந்தியாவில் (தெலுங்கானா, சாரநாத், கேங்டாக் மற்றும் தர்மசாலா) மற்றும் வெளிநாடுகளில் (ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் கம்போடியா) நான்கு பிராந்திய மாநாடுகள் ஏற்பாடு செய்யப் படுகின்றன.