எம்பர் அறிக்கையானது, 2025 ஆம் ஆண்டின் முக்கிய உலகளாவிய மின்சாரப் போக்குகள் மற்றும் தூய்மையான ஆற்றல் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டில் புதிய மின்சாரத் தேவையின் வளர்ச்சியினைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முழுமையாகப் பூர்த்தி செய்ததோடு, புதைபடிவ எரிபொருள் உற்பத்தியின் அதிகரிப்பையும் தடுத்து நிறுத்தியது.
சூரிய சக்தியானது 636 டெராவாட்-மணிநேரம் (TWh) அதிகரித்து 2,778 TWh ஆக உயர்ந்து உள்ளதோடுஇது 849 TWh ஆக உயர்ந்த மின் தேவையில் 75%-ஐ பூர்த்தி செய்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 33.8% பங்கினை எட்டியுள்ளதோடுஇது கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறையாக நிலக்கரியை (33.0%) விஞ்சியுள்ளது.
புதைபடிவ எரிபொருள் உற்பத்தி 38 TWh குறைந்துள்ளதோடுசீனா (-56 TWh) மற்றும் இந்தியாவில் (-52 TWh) பெரும் சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி 98 TWh அதிகரித்துள்ளதோடுசூரிய சக்தி 53 TWh மற்றும் காற்று சக்தி 22 TWh இதில் பங்களித்துள்ளன.
இந்தியாவின் மின் தேவை 49 TWh ஆக அதிகரித்துள்ள நிலையில், நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி சுமார் 44 TWh குறைந்துள்ளது.