உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை – 2021
July 17 , 2021 1416 days 656 0
இந்த அறிக்கையானது உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
உணவுப் பாதுகாப்பில் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை பற்றிய நினைவூட்டலை இந்த அறிக்கை வழங்குகிறது.
இந்த ஆய்வானது 62 குறைவான மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் மேற் கொள்ளப் பட்டது.
வருமான இழப்பு காரணமாக ஆரோக்கியமான உணவை வாங்கும் திறனில் குறைவு ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட வருமான இழப்பு மற்றும் உணவு விலை உயர்வு ஆகியவற்றினால் கூடுதலாக 141 மில்லியன் மக்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடியவில்லை.
ஆரோக்கியமான உணவின் விலையானது அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவின் விலையை விட 60% அதிகமாகும்.
2020 ஆம் ஆண்டில் 2.37 பில்லியன் மக்களால் போதுமான உணவைப் பெற இயலாத நிலை நிலவியது.
2020 ஆம் ஆண்டில் உலகளவில் மூன்றில் ஒருவருக்குப் போதுமான உணவைப் பெற இயலாத நிலையில் இருந்தனர்.
உலகின் 12 சதவீத மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையினை எதிர் கொண்டனர்.