உலகின் பழங்குடியின மக்களுக்கான சர்வதேச தினம் 2025 - ஆகஸ்ட் 09
August 13 , 2025 298 days 267 0
இது பழங்குடியினச் சமூகங்களின் உரிமைகள், கலாச்சாரங்கள் மற்றும் அடையாளங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Indigenous Peoples and Artificial Intelligence (AI): Defending Rights, Shaping Futures” என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையானது 2019 ஆம் ஆண்டினை சர்வதேசப் பழங்குடியின மொழிகள் ஆண்டாக அறிவித்தது.
2022 ஆம் ஆண்டு முதல் 2032 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தினைச் சர்வதேசப் பழங்குடியின மொழிகளுக்கான தசாப்தமாகவும் ஐ.நா அறிவித்தது.