டென்மார்க்கில் அமைக்கப்பட்டுள்ள மணற்கோட்டையானது உலகின் மிக உயரமான மணற்கோட்டையாக புதிய கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.
டச்சு நாட்டு (நெதர்லாந்து) புதுமைப் படைப்பாளரான வில்ஃப்ரெடு ஸ்டிஜ்கெர் (Wilfred Stijger) என்பவர் உலகின் 30 சிறந்த மணற்சிற்பிகளின் உதவியுடன் இதனைக் கட்டமைத்தார்.
முக்கோண வடிவிலான இந்த மணற்கோட்டை டென்மார்க்கிலுள்ள புளோக்கஸ் எனும் நகரில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இதன் உயரம் 21.16 மீட்டர் (69.4 அடி) ஆகும்.
இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் 17.66 மீட்டர் உயரத்தில் ஒரு மணற் கோட்டை அமைக்கப்பட்டுச் சாதனை படைக்கப்பட்டு இருந்தது.