மஹாராஷ்டிராவின் புனேயில் லோனி கல்பார் பகுதியில் உள்ள மஹாராஷ்டிரா தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT) உலக அமைதி பல்கலைக்கழக (MIT - WPU) வளாகத்தில் உலகின் மிகப்பெரிய குவிமாடம் திறக்கப்பட்டது.
மஹாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தின் முக்கிய நபராக விளங்கிய 13-ம் நூற்றாண்டின் கவிஞரும் தத்துவ ஞானியுமான ஞானேஷ்வரின் பெயர் இம்மாடத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்த குவிமாடமானது 160 அடி விட்டம் கொண்டுள்ளது. இது 139.6 அடி விட்டத்தை உடைய வாடிகன் குவிமாடத்தின் சாதனையை முந்தியுள்ளது.
263 அடி உயரமான இக்குவி மாடம் மையத்திலிருந்து தொங்கும் மணியையும் 30,000 சதுர அடிகள் பரப்பளவில் பிராத்தனை மண்டபத்தையும் கொண்டுள்ளது.