TNPSC Thervupettagam

உலகின் முதலாவது கோவிட்-19 இணைத் தடுப்பு மருந்து

July 16 , 2021 1424 days 629 0
  • கியூபா நாடானது சோபெர்னா 2 (காவெரைன் 2) எனப்படும் உலகின் முதலாவது  கோவிட்-19 இணைத் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளது.
  • சோபெர்னா 2 தடுப்பு மருந்தானது மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது.
  • இது சோபெர்னா 2 தடுப்பு மருந்தின் இரண்டு தவணைகளையும் சோபெர்னா பிளஸ் தடுப்பு மருந்தின் ஒரு தவணையையும் கொண்டது.
  • சோபெர்னா 2 தடுப்பு மருந்தினை சோபெர்னா பிளஸ் எனும் ஒரு உந்து மருந்துடன் செலுத்தும் போது அறிகுறிகளுடைய கோவிட்-19  பாதிப்புகளுக்கு எதிராக அது 91 சதவீதச் செயல்திறனை வழங்கும்.
  • இதற்கு ஒப்புதல் வழங்கப் பட்டால் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தினைத் தயாரித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடாக கியூபா உருப் பெறும்.
  • சோபெர்னா 2 மருந்தானது மூலக்கூறு நோயெதிர்ப்பு மையம் மற்றும் தேசிய உயிரி பொருள் உற்பத்தி மையம் ஆகியவற்றுடன் இணைந்து ஃபின்லே நிறுவனத்தினால் (Finlay Institute) உருவாக்கப்பட்டது.
  • இணைத் தடுப்பு மருந்து (conjugate vaccine) என்பது ஒரு பலவீனமான ஆன்டிஜனை வலுவான ஆன்டிஜனோடு சேர்த்து அதனை ஒரு வைரஸ் தாங்கியாக அமைக்கிறது.
  • இதனால் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது பலவீனமான ஆன்டிஜனுக்கு எதிராக வலுவான முறையில் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்