2025 ஆம் ஆண்டில் உலகளாவியப் பயணிகள் போக்குவரத்து ஆனது 9.9 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் ஆனது 2024 ஆம் ஆண்டில் பயணிகள் போக்குவரத்தில் உலகின் மிகவும் பரபரப்பான ஒரு விமான நிலையம் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து துபாய் சர்வதேச விமான நிலையம் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டல்லாஸ்/ஃபோர்ட் வொர்த் (DFW) விமான நிலையம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 9வது இடத்தைப் பிடித்தது.