2024 ஆம் ஆண்டு மூடிஸ் அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆய்வு 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நேச்சர் சிட்டிஸ் என்ற இதழில் வெளியிடப் பட்டது.
இந்தியாவில், 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடலோர அல்லது நதி சார் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ஆன குடிசைப் பகுதிகள் இந்தியாவில் உள்ளன.
இந்தியாவில் சுமார் 158 மில்லியனுக்கும் அதிகமான குடிசைவாசிகள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படக் கூடிய குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.
இது ரஷ்யாவின் மக்கள்தொகையை விட அதிகம் ஆகும் .
மேலும் அவற்றுள் பெரும்பாலானவை கங்கை நதி டெல்டாவில் குவிந்து உள்ளன.
அத்தகைய மக்கள்தொகையில் மிகப்பெரியதான செறிவும் அதிக எண்ணிக்கையும் தெற்காசிய நாடுகளில் உள்ளன.
முழுமையான எண்ணிக்கையில் வட இந்தியா முன்னணியில் உள்ளது.
அதைத் தொடர்ந்து இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளன.
மற்ற குறிப்பிடத்தக்க அளவில் 'அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில்' ருவாண்டா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், வடக்கு மொராக்கோ மற்றும் ரியோ டி ஜெனிரோவின் கடலோரப் பகுதிகள் அடங்கும்.
உலகளாவிய தெற்குப் பகுதியில், 67,568 தொகுப்பு/திரள்களின் 908,077 வீடுகளில் வசிக்கும் சுமார் 445 மில்லியன் மக்களை உள்ளடக்கிய குடியிருப்புகள் ஒட்டு மொத்த அளவில் 33% முறைசாரா குடியேற்றங்கள் ஆகும்.
அவை ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் விகிதாச்சாரத்தில் அதிக எண்ணிக்கையிலான வெள்ளப்பெருக்கு குடியிருப்புகள் உள்ளன.
இங்கு ஆராய்ச்சியாளர்கள் கிராமப்புறம், புறநகர் மற்றும் நகர்ப்புறம் என மனிதக் குடியிருப்புகளை வகைப்படுத்தினர்.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் மிகவும் அதிக நகரமயமாக்கல் விகிதங்களை (80%) கொண்டிருந்தன.
இதனால், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடியேற்றங்கள் நகர்ப்புறங்களில் இருந்தன.
இதற்கு மாறாக, ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் மிகக் குறைந்த நகரமயமாக்கல் விகிதங்கள் இருந்தன என்பதோடு மேலும் சுமார் 63% முறைசாரா குடியேற்றங்கள் அங்கு கிராமப்புறங்களாக இருந்தன.
சியரா லியோன் மற்றும் லைபீரியாவில் உள்ள முறைசாரா குடியேற்றங்கள் பெரும்பாலான மக்களைக் கொண்டிருந்தன.
இந்தியாவில், ஆய்வின் போது, 40% குடிசைவாசிகள் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வந்தனர்.
இந்தியா மற்றும் வங்காளதேசத்தில், தாழ்வான கங்கை டெல்டா மற்றும் பெரிய அளவிலான தேசிய மக்கள் தொகை இந்த எண்ணிக்கைக்குப் பங்களிக்கின்றன.
வேலை வாய்ப்பு, சமூகப் பாதிப்புகள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல காரணிகளால் மக்கள் வெள்ளப்பெருக்குப் பகுதிகளில் குடியேறுகிறார்கள் அல்லது குடியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.