உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வினைத்திறன் மிக்க காற்று தூய்மையாக்கும் கருவி - ‘விஸ்தார்’
July 30 , 2018 2967 days 1317 0
சென்னையின் இந்திய தொழில்நுட்ப நிறுவனமானது (Indian Institute of Technology - IIT) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வினைத்திறன் மிக்க காற்று தூய்மையாக்கும் கருவி ‘விஸ்தாரி’னை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது IIT-ன் உதவி பெற்ற தொடக்கநிலை திட்டமான, ‘AirOk’ - வினால் மேம்படுத்தப்பட்டது.
தனிப்பட்ட பொருட்கள், நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மற்றும் வாயுப் பொருட்கள் போன்ற வெவ்வேறு மாசுக்களை வடிகட்டும் திறனை விஸ்தார் கொண்டுள்ளது.
இது தற்பொழுது சந்தையில் உள்ள மற்ற காற்று தூய்மையாக்கும் கருவிகளை விட இரண்டு மடங்கு அதிக வாழ்நாளினை கொண்டது ஆகும். இக்கருவியின் ஆயுட்காலம் ஒரு வருடம் ஆகும்.