உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீரொளிக் கற்றை ஆயுதம் DURGA-2
February 27 , 2024 537 days 461 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது DURGA-2 எனப்படுகின்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதன் சீரொளிக் கற்றை ஆயுதத்தின் அசல் முன் மாதிரியைப் பரிசோதிக்க தயாராகி வருகிறது.
DURGA என்பது திசை சார்ந்தக் கட்டுப்பாடுகள் அற்ற சீரொளிக் கற்றை சார் ஆயுத அமைப்பு என்பதைக் குறிக்கிறது.
தற்போதைய தலைமுறை தொழில்நுட்பத்திலான விமான எதிர்ப்பு அல்லது ஏவுகணை எதிர்ப்பு ஆயுத அமைப்புகள் பிழையுராத் தன்மை கொண்டதாக கருதப் படவில்லை.
ஆனால் சீரொளிக் கற்றை சார் ஆயுதம் ஆனது 100 சதவிகிதம் அழிப்பு வாய்ப்பினைக் கொண்டிருப்பதாக கருதப் படுகிறது.