10 சதவிகித அளவிலான உள்நாடு உயிரி விமான எரிபொருளை உள்ளடக்கிய கலப்பின விமான எரிபொருளைப் பயன்படுத்திப் பறந்திடுவதற்கு இந்திய விமானப் படையின் AN-32 விமானத்திற்கு முறையாக பறப்பதற்கானச் சான்று அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உயிரி விமான எரிபொருளானது முதலில் 2013 ஆம் ஆண்டில் CSIR-IIP (Council of Scientific & Industrial Research - Indian Institute of Petroleum) ஆய்வகத்தால் டேராடூனில் தயாரிக்கப்பட்டதாகும்.
இது சத்தீஸ்கரின் உயிரி டீசல் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஜத்ரோபா எண்ணெயைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டதாகும்.
இந்த உயிரி எரிபொருளானது விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மரத்திலிருந்துப் பெறப்பட்ட எண்ணெயிலிருந்துத் தயாரிக்கப்படும்.
இதன்மூலம் இது அவர்களது வருமானத்தை கணிசமான அளவு உயர்த்தும்.