ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் மற்றும் மத்திய புள்ளியல் & திட்டச் செயல்படுத்துதல் துறை அமைச்சகம் ஆகிய இரண்டும் இணைந்து ஊட்டச்சத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது பட்டினியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாவது நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதலுக்கான நாட்டின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது.
இது 5 வயதிற்கும் கீழுள்ள இந்தியக் குழந்தைகளில் 4 சதவிகிதக் குழந்தைகள் 2022 ஆம் ஆண்டில் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பர் என்பதைக் கண்டறிந்துள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகித ஏழைகளிடையே ஆற்றலின் தனி நபர் நுகர்வானது சராசரியாக 1811 கிலோ கலோரிகளாக (பரிந்துரைக்கப்பட்டது - ஒரு நாளைக்கு 2155 கிலோ கலோரிகள்) உள்ளது.