TNPSC Thervupettagam

ஊதாப் புரட்சி

April 1 , 2021 1556 days 2786 0
  • ஜம்முவிலுள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (IIIM – Jammu) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை இரண்டும் இணைந்து, நறுமண (அரோமா) திட்டத்தின் கீழ் ஊதாப் புரட்சியின் இரண்டாம் கட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • ஜம்முவிலுள்ள தோடாவில் அடைந்த முதல் கட்டத்தின் வெற்றியை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த ஊதாப் புரட்சியின் கீழ், தோடா மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் வருமானம், சோள உற்பத்தியிலிருந்து லாவெண்டர் சாகுபடிக்கு மாறியதன் மூலம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
  • முதல்முறையாக அதனைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலவசமாக லாவெண்டர் செடிகள் வழங்கப் பட்ட.
  • இதற்கு முன்பு லாவெண்டர் சாகுபடி செய்தவர்களுக்கு ஒரு செடிக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை வசூலிக்கப்பட்டது.
  • விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஜம்மு IIIM நிறுவனத்திடமிருந்து உதவியினைப் பெறுவர்.
  • விவசாயிகள் லாவெண்டர் எண்ணெய்யைப்  பிரித்தெடுப்பதற்காக தோடாவில் CSIR நிறுவனம் – ஜம்மு IIIM நிறுவனம் ஆகியவற்றால் அமைக்கப்பட்டுள்ள நான்கு வடிகலன் தொழிற்சாலைக்குத்  தாங்கள் சாகுபடி செய்த லாவெண்டர்களை கொண்டு செல்வதற்கான உதவியினைப்  பெறுவர்.
  • தற்போது, பெரிய அளவிலான லாவெண்டர் சாகுபடியானது ஜம்மு & காஷ்மீரில் மட்டுமே  செய்யப் படுகிறது.
  • இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநில அரசுகள் லாவெண்டர் சாகுபடியை மேற்கொள்ளுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றன.

ஊதா பொருளாதாரம்

  • லாவெண்டர் எண்ணெய் லிட்டருக்குக் குறைந்தது ரூ.10,000க்கு விற்பனை செய்யப் படுகிறது.
  • லாவெண்டர் நீரானது லாவெண்டர் எண்ணெயிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட இயலும்.
  • இது வாசனைப் பத்திகளை (குச்சிகளை) தயாரிக்கப் பயன்படுகிறது.
  • வடிகலன்கள் மூலம் பூக்களிலிருந்து ஹைட்ரோசால் உருவாகிறது.
  • இது சோப்புகள் மற்றும் அறையின் வாசனை ஆகியவற்றினை மேம்படுத்தும் பொருட்கள் (room freshners) ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

குறிப்பு

  • 2016 ஆம் ஆண்டில், நறுமணமுடன் கூடிய மருத்துவக் குணமிக்க தாவர எண்ணெயினைத் தயாரிப்பதற்கு வேண்டி அத்தாவரங்களின் சாகுபடியை அதிகரிப்பதற்காக ரோமா மிஷன் (நறுமணத் திட்டம்) எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்