எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ராபி பருவப் பயிர்களுக்கு மிக அதிக குறைந்தபட்ச ஆதார விலையினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தோனேசியா, மலேசியா, அர்ஜென்டினா முதலிய முக்கிய சமையல் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்ட தொழிலாளர்ப் பற்றாக்குறை மற்றும் பயிர்ச் சேதம் போன்றவற்றின் காரணமாக சமையல் எண்ணெய்களின் விலை 50% உயர்ந்துள்ளது.
எனவே எண்ணெய் வித்துக்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கச் செய்வதன் மூலம்,
உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்களை இந்தியா சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும்,
உலகளாவிய காரணிகளால் ஏற்படும் விலை உயர்விலிருந்து இந்திய நாட்டின் நுகர்வோரைப் பாதுகாக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.