எதிர்காலத் தலைமுறையினருக்கான புகையிலைத் தடை - இங்கிலாந்து
April 25 , 2026 11 hrs 0 min 24 0
2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் சட்டப் பூர்வமாகப் புகையிலை வாங்குவதைத் தடைசெய்யும் புகையிலை மற்றும் வேப்ஸ் / மின்-சிகரெட்டுகள் சட்டத்தை இங்கிலாந்து (UK) நிறைவேற்றியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டக் கட்டுப்பாட்டைப் படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் "புகை இல்லாத தலைமுறையை" உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் புகைப் பிடிப்பதால் ஆண்டுதோறும் சுமார் 64,000 இறப்புகள் ஏற்படுவதோடு இது தேசிய சுகாதார சேவைக்கு (NHS) பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கான தடையை விரிவுபடுத்துவதுடன், வேப்பிங்/மின்-சிகரெட் புகைத்தல் மீதான விதிகளையும் இச்சட்டம் கடுமையாக்குகிறது.
இந்த மசோதா அரச ஒப்புதல் பெற்ற பிறகு சட்டமாக மாறும், இதன்மூலம் உலகளவில் மிகவும் கடுமையான புகையிலை எதிர்ப்புச் சட்டங்களில் ஒன்றாக இது அமையும்.