போட்டித் தன்மைக்கான நிறுவனமானது (IFC) இந்த அறிக்கையினைத் தயரித்துள்ளது.
இந்த அறிக்கையானது, இந்தியாவின் திறன் சார் கட்டமைப்பினை மதிப்பிடுவதற்காக 2023–24 வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS) மீதான தரவுகளைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவின் பணியாளர் வளத்தில் 88% பேர் குறைந்த திறன் கொண்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பணியாளர் வளத்தில் சுமார் 10–12% பணியாளர்கள் மட்டுமே உயர் திறன் கொண்ட பணிகளில் உள்ளனர்.
இந்தியாவில் சுமார் 66 சதவீதத்திற்கும் அதிகமான தொழிற்கல்விப் பயிற்சியை ஐந்து துறைகள் கொண்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட இந்த முக்கியத் துறைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT மற்றும் ITeS), ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, மின்னணுவியல், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல், மற்றும் அழகு மற்றும் நல்வாழ்வு ஆகியவை அடங்கும்.
இந்த அறிக்கைக்கான தரவு
வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS),
பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 (PMKVY 4.0),
துறை சார் திறன் சபைகள் (SSC) மற்றும்
தேசியப் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) முகப்புப் பக்கங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது.