இந்திய உச்ச நீதிமன்றமானது எதிர்ப்பு உரிமை மற்றும் சாத்தியமான தடைகள் ஆகியவை “நாடு தழுவிய கொள்கை” கிடையாது என்றும் அவை சூழ்நிலையைப் பொறுத்து பல்வேறு நிலைகளில் வேறுபாடும் என்றும் கூறியுள்ளது.
நீதியரசர் எஸ்கே கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி ஆகியோரைக் கொண்ட அமர்வானது டிசம்பரில் நடைபெற்ற சிஏஏ-விற்கு எதிரான போராட்டங்கள் குறித்த மனுக்களை விசாரிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளது.
இந்த அமர்வு, எதிர்ப்பு உரிமையானது ஒன்று கூடும் உரிமை போன்ற இதர பொது உரிமைகளுக்கு எதிராக சமநிலையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.