2018 ஆம் ஆண்டின் உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கையில் மேற்கொள்ளப் பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எரிபொருள் நிறுவனங்கள், பெட்ரோலில் எத்தனால் கலப்பதற்கான சதவீதத்தை 20% ஆக உயர்த்த வேண்டியதற்கான கால வரம்பினை 2030 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டாக நிர்ணயிப்பதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெட்ரோலில் 20% எத்தனாலைக் கலக்கும் விதிமுறையானது கொள்கை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வர உள்ளது.
2022 ஆம் ஆண்டு மார்ச் 13 தேதி நிலவரப்படி இந்தியா 9.45% எத்தனால் கலப்பு என்ற நிலை அடைந்துள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் கூறுகிறது.
2022 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் இது 10% ஆக உயரும் என்று மத்திய அரசு கணித்துள்ளது.