ஒரு வெப்பமண்டலப் புயலான எல்சா சமீபத்தில் மிகவும் வலுவடைந்து அதன் மையப் பகுதியானது தென்-மத்திய கியூபாவினை அடைந்துள்ளது.
இது கரீபிய மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி அபாயத்தை உண்டாக்கக் கூடிய வகையில் இருக்கும் ஒரு வெப்ப மண்டலப் புயலாகும்.
பெயரிடப் பட்ட வகையில் இது 5வது புயலாக இருப்பதோடு 2021 ஆம் ஆண்டிற்கான அட்லாண்டிக் சூறாவளிப் பருவத்தின் முதல் சூறாவளியாகவும் இது உள்ளது.
2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எமிலி சூறாவளிக்குப் பிறகு கிழக்கு கரீபியன் கடலில் உருவான வலுவான ஜூலை மாத சூறாவளி இதுவேயாகும்.