TNPSC Thervupettagam

எளிய ஆளுமைத் திட்டம்

June 1 , 2025 6 days 86 0
  • தமிழக முதல்வர் 'உழவரைத் தேடி மற்றும் எளிய ஆளுமை' என இரண்டு முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • உழவரைத் தேடி வேளாண்மைத் திட்டம் ஆனது, ஓராண்டிற்குள் தமிழ்நாட்டின் 17,116 வருவாய்க் கிராமங்களிலும் செயல்படுத்தப்படும்.
  • இந்தக் குழுவில் அனைத்து துறைகள், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு மற்றும் கிருஷி விஞ்ஞான மையத்தின் தொகுதி அளவிலான அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.
  • இந்தக் குழு விவசாயிகளைச் சந்தித்து, வேளாண் களப் பாதுகாப்பு, பரப்பளவு, சாகுபடி மற்றும் மகசூல் குறித்து விளக்கமளிக்கும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்களில் மாதத்திற்கு இரண்டு முறை இந்த முகாமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதே போல், அரசாங்கத்தினால் எளிய ஆளுமைத் திட்டத்தின் மூலம், அரசாங்கத்தின் செயல்பாட்டை திறம்பட மேம்படுத்தவும், குடிமக்களுக்குத் தேவையான சேவைகளை இயங்கலையில் வழங்கவும் இயலும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், சுகாதாரச் சான்றிதழ், பொதுக் கட்டிட உரிமம், பணி புரியும் பெண்களுக்கான விடுதி உரிமம், பெண்கள் காப்பகங்களுக்கான உரிமம், சொத்து மதிப்புச் சான்றிதழ், முதியோர் இல்ல உரிமம், நடத்தைச் சான்றிதழ், அரசு ஊழியர்கள் கடவுச் சீட்டுப் பெறுவதற்குத் தடையில்லாச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்