2024–25 முதல் 2028–29 வரையிலான ஆண்டுகளுக்கான எழுச்சிமிகு கிராமங்கள் திட்டம்-II (VVP-II)-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் மூலம் ஏற்கனவே VVP-I இன் கீழ் உள்ள வடக்கு எல்லைப்புறப் பகுதிகள் தவிர இந்தியாவின் சர்வதேச நில எல்லைகளுக்கு (ILBs) அருகிலுள்ள கிராமங்களை மேம்படுத்த உதவும்.
₹6,839 கோடி மொத்தப் பட்ஜெட் கொண்ட இந்தத் திட்டம் அருணாச்சலப் பிரதேசம், அசாம், குஜராத், ஜம்மு & காஷ்மீர், லடாக், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற 18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கியது.