நாடு முழுவதும் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் 462 ஏகலைவா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளை (Ekalavya Model Residential Schools - EMRS) பிரதமர் மோடி தொடங்கினார்.
இந்தப் பள்ளிகள் இந்தப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான தொடக்க நிலை, இடை நிலை மற்றும் உயர் இடை நிலைக் கல்வியை வழங்குவதற்குக் கவனம் செலுத்துகின்றன.
இது மத்திய பழங்குடி விவகார அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படுகின்றது.
இதுபற்றி
EMRS என்பது இந்தியா முழுவதும் உள்ள இந்தியப் பழங்குடியினருக்கு (பட்டியல் பழங்குடியினர்) மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளை ஏற்படுத்துவதற்கான இந்திய அரசின் ஒரு திட்டமாகும்.
இது 1997-98 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அவை இந்திய அரசியலமைப்பின் சரத்து 275 (1) இன் கீழ் மானியங்களுடன் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருக்கின்றன.