நகரங்களில் உள்ள ஏரிகளின் சுகாதாரம் மற்றும் காற்றின் தரத்தைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும் குஜராத் அரசு 'ஏரி மற்றும் காற்று கண்காணிப்பு' முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
ஏரிப் பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், பாசி வளர்ச்சி, கழிவுகள் மற்றும் நீரின் தரக் குறியீடுகளைக் கண்காணிக்க இது செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
17 மாநகராட்சிகள் மற்றும் 152 நகராட்சிப் பகுதிகளில் நிகழ்நேரக் காற்றின் தரக் குறியீடு (AQI) கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
காற்று மாசுபாடு அதிகரிக்கும் போதோ அல்லது ஏரியின் நிலை மோசமடையும் போதோ இந்த அமைப்பு தானியங்கி எச்சரிக்கைகளை வழங்கும்.