இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் ஏற்றுமதி தயார்நிலையை மதிப்பிடுவதற்காக நிதி ஆயோக் அமைப்பு 2024 ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டினை (EPI) வெளியிட்டுள்ளது.
ஏற்றுமதி ஆயத்த குறியீடு (EPI) என்பது ஏற்றுமதி உள்கட்டமைப்பு, வணிக சுற்றுச்சூழல் அமைப்பு, கொள்கை ஆதரவு மற்றும் ஏற்றுமதி செயல்திறனை அளவிடும் ஒரு கூட்டு குறியீடாகும்.
EPI 2024 என்பது நான்காவது குறியீடாகும் என்பதோடுஇது முதலில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இந்தக் குறியீடு அதிகாரப்பூர்வ அரசாங்கத் தரவைப் பயன்படுத்துகின்ற 4 தூண்கள், 13 துணைத் தூண்கள் மற்றும் 70 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது.
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு முன்னிலையில் உள்ளவை, சவாலை எதிர்கொள்பவை மற்றும் ஆர்வ மிக்கவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை பெரிய மாநிலங்களில் முன்னணியில் உள்ளன அதே நேரத்தில் உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு & காஷ்மீர் சிறிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச பிரிவுகளில் முன்னணியில் உள்ளன.