TNPSC Thervupettagam

ஐ.என்.எஸ் ஜமுனா – நீர்ப்பரப்புக் கணக்கெடுப்பு

February 15 , 2020 1970 days 658 0
  • கூட்டு நீர்ப்பரப்புக் கணக்கெடுப்பை மேற்கொள்ள இந்திய கடற்படைக் கப்பல் (ஐ.என்.எஸ்) ஜமுனா ஆனது இலங்கையின் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
  • நீர்ப்பரப்புக் கணக்கெடுப்பு என்பது கடற்பயணத்தைப் பாதிக்கும் அம்சங்களின் அளவீடு மற்றும் ஆய்வு பற்றியதாகும்.
  • இது கடல் எண்ணெய் ஆய்வு, அகழ்வாராய்ச்சி, எண்ணெய் துளையிடுதல் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.
  • இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான தரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றை சர்வதேச நீர்ப்பரப்பு அமைப்பு (International Hydrographic Organization - IHO) வெளியிடுகின்றது.
  • இந்த அமைப்பானது 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தியாவும் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளது.

இந்திய கடற்படை நீர்ப்பரப்புத் துறை

  • இதன் அலுவலகம் டேராடூனில் அமைந்துள்ளது.
  • தற்போது 8 இந்திய கடற்படைக் கப்பல்கள் நீர்ப்பரப்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
  • இதில் ஐ.என்.எஸ் நிருபக், ஐ.என்.எஸ் ஜமுனா, ஐ.என்.எஸ் இன்வெஸ்டிகேட்டர், ஐ.என்.எஸ் சட்லெஜ், ஐ.என்.எஸ் சந்தாயக், ஐ.என்.எஸ் தர்ஷக், ஐ.என்.எஸ் சர்வேக்ஷக் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்