இந்தியக் கடற்படையில் ஒரு புதிய நீர்மூழ்கிக் கப்பலும், பிரான்சு நாட்டினால் வடிவமைக்கப் பட்ட ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களில் ஐந்தாவது கப்பலுமான ஐ.என்.எஸ் வகிர் தனது முதல் கடற்பயணச் சோதனையை மேற்கொண்டது.
பிரான்ஸ் நாட்டின் கடற்படைக் குழுமத்துடன் இணைந்து மேசகான் கப்பல்கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்படும் போது இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு “யார்டு 11879” எனப் பெயரிடப் பட்டது.
இது பணியில் இணைக்கப்பட்டப் பிறகு இதற்கு “வகிர்” எனப் பெயரிடப் படும்.