August 7 , 2021
1463 days
651
- இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் தனது முதலாவது கடல்பயணச் சோதனையை மேற்கொண்டது.
- இந்தியாவினுள்ளேயே இராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்வதனை இது ஊக்குவிக்கிறது.
- இது 2022 ஆம் ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு உட்படுத்தப்படும்.
- கடற்படையானது இக்கப்பலைப் படையில் இணைத்து அதன் பின்பு விமானச் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.
- விமானச் சோதனையின் போது ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான MiG 29K போர் விமானங்களின் ஏற்ற இறக்கச் சோதனைகள் மேற்கொள்ளப் படும்.
- ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலானது 44000 டன் எடை கொண்ட விமானந் தாங்கிக் கப்பலாகும்.
- இது கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டது.
Post Views:
651