TNPSC Thervupettagam

ஐஐஐடி (Indian Institutes of Information Technology - IIIT) சட்டங்கள் திருத்த மசோதா, 2020

September 26 , 2020 1789 days 749 0
  • 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இந்திய நாடாளுமன்றமானது இந்தியத் தகவல் தொழில்நுட்ப மையங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2020 என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்தத் திருத்தமானது 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளின் முதன்மைச் சட்டங்களைத் திருத்த உள்ளது.
  • இது பொது-தனியார் பங்களிப்பின் மூலம் இயங்கும் ஐஐஐடி போபால், ஐஐஐடி அகர்தலா, ஐஐஐடி சூரத், ஐஐஐடி பாகல்பூர் மற்றும் ஐஐஐடி ராய்ச்சூர் என்ற 5 கல்வி நிறுவனங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கக் கோருகின்றது.
  • இந்த கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே சமுதாயப் பதிவுகள், சட்டம் 1860 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்களாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
  • இதன் மூலம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த களவில் நிறுவனங்களாக அறிவிக்கப் பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையானது 25 ஆக உயர இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்