ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவின் துணைத் தலைமை
June 11 , 2025 2 days 27 0
2025 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC) தாலிபான் தடைக் குழுவிற்குப் பாகிஸ்தான் தலைமை தாங்கவுள்ளது.
15 நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவின் துணைத் தலைமைப் பொறுப்பினை இது வகிக்கும்.
UNSC சபையின் 1267 ISIL மற்றும் அல்-கொய்தா தடைக் குழுவிற்கு டென்மார்க் நாடு தலைமை தாங்க உள்ளது.
ரஷ்யா மற்றும் சியரா லியோன் ஆகியவை இணைந்து 2025 ஆம் ஆண்டிற்கான துணைத் தலைமைப் பொறுப்பினை ஏற்கும்.
1988 தலிபான் தடைக் குழுவிற்குப் பாகிஸ்தான் தலைமை தாங்கும்.
ஆப்கானிஸ்தானின் அமைதி, நிலைத் தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதில் தாலிபனுடன் தொடர்புடைய தனிநபர்கள், குழுக்கள், தனியார் அல்லது சில பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இன்ன பிற நிறுவனங்கள் ஆகியவை மீது சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதத் தடையை இந்த ஒரு தீர்மானமானது விதிக்கிறது.
கயானா மற்றும் ரஷ்யா ஆகியவை தாலிபன் தடைக் குழுவின் துணைத் தலைமைப் பொறுப்பினை ஏற்கும்.
பாகிஸ்தான் நாடானது, 15 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட பாதுகாப்பு சபையில் 2025-26 ஆம் ஆண்டு காலக் கட்டத்திற்கு நிரந்தரமற்ற உறுப்பினராகச் செயல்படும்.
இந்தியாவானது, இந்த சபையில் ஒரு நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்த 2021-22 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில், 2022 ஆம் ஆண்டிற்கான UNSC தீவிரவாத எதிர்ப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பினை வகித்தது.