ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களுக்கான சர்வதேச தினத்தில் (மே 29) இரண்டு இந்திய அமைதிப் படையினருக்கு ஐக்கிய நாடுகள் சபையால் மரணத்திற்குப் பிந்தைய கௌரவம் வழங்கப்படவுள்ளது.
ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் தியாகம் செய்தமைக்காக லான்ஸ் ஹவில்தார் ஹர்பஜன் சிங் மற்றும் நைப் சுபேதார் சுஜித் குமார் பிரதான் ஆகியோருக்கு 'டாக் ஹம்மர்ஸ்கோல்ட் பதக்கம்' வழங்கப்படவுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைப்பு நிலைப் படுத்தல் பணியில் (MONUSCO) ஹர்பஜன் சிங் பணியாற்றினார் அதே சமயம் சுஜித் குமார் பிரதான் தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியில் (UNMISS) பணியாற்றினார்.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) பணியாற்றியதற்காக மேஜர் அபிலாஷா பராக்கிற்கு 2025 ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் சிறந்த இராணுவப் பாலினப் பாதுகாவலர் விருது” வழங்கப்படவுள்ளது.
ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு அதிக சீருடைப் பணியாளர்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது, தற்போது 4,200 க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஐ.நா பணிகளில் சுமார் 180 இந்திய அமைதி காப்பாளர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் என்ற நிலையில் இது படைகளை வழங்கும் நாடுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.
1948 ஆம் ஆண்டில் முதல் ஐ.நா அமைதிப் படை நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அமைதிப் படை வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.