TNPSC Thervupettagam

ஐ.நா. பேச்சுவார்த்தையில் ‘எதிர்காலத்திற்கான ஒப்பந்தம்’

July 25 , 2025 14 hrs 0 min 23 0
  • எதிர்காலத்திற்கான ஒப்பந்தம் மற்றும் அதன் முக்கிய இணைப்புகளான உலகளாவிய எண்ணிம உடன்படிக்கை மற்றும் எதிர்காலத் தலைமுறைகள் குறித்த பிரகடனத்திற்கு இந்தியா தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தினை மறுபரிசீலனை செய்வதற்கான மூன்றாவது முறைசாரா பேச்சு வார்த்தையின் போது இது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த முறைசாரா பேச்சுவார்த்தையானது, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகளுக்கு 2028 ஆம் ஆண்டு ஒப்பந்த மறு ஆய்வுக்கு முன்னதாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்கியது.
  • 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற எதிர்காலத்திற்கான உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள் எதிர்காலத்திற்கான ஒப்பந்தத்தையும் அதன் இணைப்புகளையும் ஏற்றுக் கொண்டனர்.
  • இந்த ஒப்பந்தமானது அதன் இணைப்புகளான உலகளாவிய எண்ணிம உடன்படிக்கை மற்றும் எதிர்காலத் தலைமுறைகள் குறித்த ஒரு பிரகடனம் ஆகியவற்றுடன் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்