TNPSC Thervupettagam

ஐ.நா.வின் புலம்பெயர்ந்த உயிரினங்களின் 13வது COP (பங்காளர்கள் மாநாடு)

February 13 , 2020 1968 days 702 0
  • 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை புலம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் (Conservation of Migratory Species of Wild Animals - CMS) 13வது பங்காளர்கள் மாநாடானது (Conference of Parties - COP) இந்தியாவால் குஜராத்தில் உள்ள காந்திநகரில் நடத்தப்பட இருக்கின்றது.
  • இந்த மாநாடானது இந்தியாவின் சார்பாக மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் நடத்தப்பட இருக்கின்றது.
  • இந்தியாவில் நடத்தப்பட இருக்கும் CMS - COP13ன் கருப்பொருள், “புலம்பெயர்ந்த இனங்கள் புவியில் உள்ள பகுதிகளை இணைக்கின்றன மற்றும் நாங்கள் அவற்றை வரவேற்கின்றோம்” என்பதாகும்.
  • CMS - COP13க்கான சின்னம் “கிபி - கானமயில்” என்பதாகும்.
  • கான மயிலானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature - IUCN) சிவப்பு பட்டியலில் “மிகவும் அச்சுறு நிலையில்” உள்ள இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

BONN ஒப்பந்தம் - இந்தியா

  • புலம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு ஆனது BONN ஒப்பந்தம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் உள்ள ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த ஒப்பந்தமாகும்.
  • இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கும் இந்தியாவானது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றது.
  • 1983 ஆம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா உறுப்பு நாடாக இருந்து வருகின்றது.
  • புலம்பெயர்ந்த கடல் உயிரினங்களைப் பாதுகாக்க இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
  • பாதுகாப்பு மற்றும் மீட்பு செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காகக் கடல் பசு, திமிங்கல சுறா, கடல் ஆமை (இரண்டு இனங்கள்) உள்ளிட்ட ஏழு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்