ஐ.நா.வின் மியான்மர் தீர்மானம் மீதான வாக்களிப்பினைத் தவிர்த்த இந்தியா
June 24 , 2021 1453 days 635 0
ஐக்கிய நாடுகளின் தீர்மானம் மியான்மர் இராணுவத்திற்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பினை எடுத்துக் காட்டியதுடன் அந்த நாட்டில் மக்களாட்சி மாற்றத்தை மீட்டெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
மியான்மர் நாட்டின் மீது ஆயுதத் தடை விதிப்பதற்கான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இந்தத் தீர்மானம் மீதான வாக்களிப்பினை இந்தியா தவிர்த்துள்ளது.
119 நாடுகள் “ஆம்” எனவும் பெலாரஸ் நாடு “இல்லை” எனவும் வாக்களித்துள்ளது, 36 நாடுகள் வாக்களிப்பினைத் தவிர்த்துள்ளன.
பின்னணி
இந்த ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதியன்று மியான்மர் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இராணுவப் புரட்சியினால் பதவி நீக்கம் செய்யப் பட்டனர்.
நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூ கியின் ஆளுங்கட்சியானது மோசடி செய்ததாக இந்த இராணுவப் புரட்சியில் குற்றம் சாட்டப்பட்டது.
முந்தைய தேர்தல் ஆணையமும் சர்வதேசக் கண்காணிப்பு அமைப்புகளும் இராணுவத்தின் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன.