உலகளாவிய பசி நிவாரணத்திற்காக நிலையான அரிசி விநியோகங்களை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இந்தியா ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அவசரகால உணவு உதவிக்காக இந்திய உணவுக் கழகம் (FCI), ஐந்து ஆண்டுகளில் 200,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்கும் என்ற நிலையில் இதில் 25% வரை குருணை தானியங்களும் அடங்கும்.
தற்போதைய விநியோகச் சுழற்சிக்கான விலை மார்ச் 31, 2026 வரை குவிண்டாலுக்கு ரூ.2,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் பரஸ்பர ஆலோசனை மூலம் வருடாந்திர மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் மோதல் ஏற்பட்டுள்ள மண்டலங்களில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தானியங்கள் கணிக்கக் கூடிய மற்றும் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதை இந்த ஒப்பந்தம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.